பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறிய வீடு வீடாக கணக்கெடுப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 11, 2021

Comments:0

பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறிய வீடு வீடாக கணக்கெடுப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறியவும், அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
* பள்ளியில் இருந்து பாதியில் நின்ற மாணவர்களை அடையாளம் காண வீடு தோறும் சென்று கணக்கெடுக்க வேண்டும். * புலம் பெயர்ந்துள்ள குடும்பத்தாரின் குழந்தைகள் தற்போது பள்ளிக் கல்வியை நிறுத்துவதற்கான சாத்தியம் அதிகம். எனவே, அவர்களைக் கண்டறிவதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. * பள்ளிகள் மீண்டும் திறப்பது தொடர்பான தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம். * மாணவர் சேர்க்கையின்போது காலதாமதம் தொடர்பான விதிமுறைகளை தளர்த்தவும், இந்த ஆண்டு கல்வியை நிறுத்திய மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் மத்திய அரசு பரிந்துரைக்கிறது. * கல்வித்தரம் பாதிக்காமல் இருக்க தொழில்நுட்ப வசதிகள், சீருடைகள், புத்தகங்கள், மதிய உணவு போன்றவை மாணவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். * சிறு கிராமப்புறங்களில் நடமாடும் வகுப்புகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாம். * பள்ளி பாடங்கள் கற்பித்தலுக்கு அப்பாற்பட்டு, படைப்பாற்றலையும், பிரச்னைகளைத் தீர்க்கும் திறனையும், எண்கள் தொடர்பான அறிவையும் மாணவர்களிடம் உருவாக்குவது இன்றைய தேவை. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews