பள்ளிகளுக்கு கோவிட் 19 பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் விழா - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 26, 2021

Comments:0

பள்ளிகளுக்கு கோவிட் 19 பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் விழா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளின் சுகாதார மேம்பாட்டுக்காக மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் கோவிட் 19 பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் விழா, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியத்தை சேர்ந்த 370 தொடக்க, 116 நடுநிலை, 59 உயர்நிலை, 63 மேல்நிலை என மொத்தம் 608 பள்ளிகளுக்கு முகக்கவசம், கிருமி நாசினி தெளிப்பான், திரவம், பிளீச்சிங் பவுடர் ஆகியவை ரூ.51.29 லட்சத்தில் மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. விழாவில், மொபிஸ் இந்தியா மனிதவள மேம்பாட்டு அலுவலர் ராம் பிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்டக் கல்வி அலுவலர் எல்லப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளின் சுகாதார மேம்பாட்டுக்காக மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் கோவிட் 19 பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் விழா, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியத்தை சேர்ந்த 370 தொடக்க, 116 நடுநிலை, 59 உயர்நிலை, 63 மேல்நிலை என மொத்தம் 608 பள்ளிகளுக்கு முகக்கவசம், கிருமி நாசினி தெளிப்பான், திரவம், பிளீச்சிங் பவுடர் ஆகியவை ரூ.51.29 லட்சத்தில் மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. விழாவில், மொபிஸ் இந்தியா மனிதவள மேம்பாட்டு அலுவலர் ராம் பிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்டக் கல்வி அலுவலர் எல்லப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews