அதிகரிக்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 17, 2020

Comments:0

அதிகரிக்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அன்னூர் தாலுகாவில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அதிகரித்துள்ளன.அன்னூர் ஒன்றியத்தில், ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகளும், ஏழு மெட்ரிக் பள்ளிகளும் உள்ளன.அரசு பள்ளிகளிலும் மெட்ரிக் பள்ளிகளிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில் மெட்ரிக் பள்ளிகளில் இருந்த பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் பாடத் திட்டம் அதிகரித்தது. இதையடுத்து, மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பலர் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேரத் துவங்கினர்.மருத்துவப் பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் மற்றும் அகில இந்திய பொறியியல் கல்லூரிகளுக்கான ஜேஇஇ ஆகிய தேர்வுகளில் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர்.
எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அட்மிஷன் அதிகரித்தது.அன்னூர் வட்டாரத்தில், அன்னூர், அல்லிக்காரம்பாளையம், காளியாபுரம், மாணிக்கம்பாளையம் ஆகிய நான்கு ஊர்களில் மட்டும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இருந்தன. தற்போது புதிதாக கெம்பநாயக்கன்பாளையம், சொக்கம்பாளையம், கரியாம்பாளையம், ஆகிய ஊர்களிலும் சி.பி.எஸ்.இ., பள்ளி துவக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சி.பி.எஸ்.இ., பள்ளி அடுத்த கல்வி ஆண்டில் துவக்க பணிகள் நடைபெற்று வருகிறது.மெட்ரிக் பள்ளிகளை விட கல்வி கட்டணம் கூடுதலாக இருந்தபோதிலும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுவதால், அன்னூர் பகுதியில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அதிகரித்துள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews