தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை நடத்திட ஆசிரியர்கள் கோரிக்கை.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 11, 2020

Comments:0

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை நடத்திட ஆசிரியர்கள் கோரிக்கை..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இடமாறுதல், பதவிஉயர்வு கலந்தாய்வை நடத்திடவேண்டுமென்று அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும்,ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் பொதுமாறுதல், பதவிஉயர்வு கலந்தாய்வு மே மாதத்தில் நடத்தப்படும். கோடை விடுமுறை காலத்திலேயே கலந்தாய்வு நடத்தப்பட்டதால், இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் இடமாறிட தேவையான கால அவகாசம் கிடைத்தது. கல்வியாண்டின் ஆரம்பத்திலேயே கலந்தாய்வு நடத்தப்பட்டதால், ஆசிரியர் குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும் எந்த இடையூறின்றி கற்பித்தல் பணி நடைபெற்றது. இந்நிலையில், கடந்த கல்வியாண்டின் இறுதியிலிருந்து கரோனா தொற்று பரவல் துவங்கிவிட்டதால், நடப்பு கல்வியாண்டு என மொத்தம் 6 மாதங்களாக பள்ளித் திறக்கப்படவில்லை. தமிழக அரசும் பொதுமுடக்கத்திலிருந்து அனைத்து தளர்வுகளும் அறிவித்துவிட்டது.இந்நிலையில், ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை, ஆன்லைனில் நடத்திடவேண்டும் என்பது ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் வருடத்தின் முதல் தேதிப்படி,ஆசிரியர்களின் பணிமூப்பு பட்டியல், பதவிஉயர்விற்கான பட்டியல் கல்வித்துறை அலுவலர்கள் தயார் செய்வது வழக்கம். பின்னர், அதனை உரிய ஆசிரியர்களிடம், ஒப்புதல்பெற்று(கையொப்பம் பெற்று), அதில் குறைகள் இருந்தால், சரிசெய்யப்பட்டு நிறைவுசெய்யப்படும்.கலந்தாய்வு காலத்தில் அப்பட்டியல்படி பதவிஉயர்வு வழங்கப்படும்.ஆறு மாதங்களாக பள்ளி திறக்கப்படவில்லை.என இக்காலத்தை பயன்படுத்தி,உரிய சமூக இடைவெளியுடன், வட்டாரக்கல்வி அலுவலர்கள், மேனிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரிஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என அனைத்துவகையினருக்கும், அவரவர் பணிமூப்புப் பட்டியல்படி பதவி உயர்வு கலந்தாய்வை தற்போது நடத்திடவேண்டும். பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு இடமாறுதல் வழங்கிடவேண்டும்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது, அடுத்த வருடம் மே மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சம் ஆசிரியர்களின் நலன் கருதி, தற்சமயம் பதவிஉயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வை நடத்திட தமிழக அரசு உத்தரவிடவேண்டும். தற்போது தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப்பள்ளிகளுக்கு வந்த பல லட்சம் மாணவர்களால், ஆசிரியர்கள் பணிநிரவல் நடைபெறாது. மாறாக கூடுதல் மாணவர்களால் ஏற்படும் கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கும் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews