தனியாா் பள்ளிகளில் இரண்டாம் கட்ட இலவச சோ்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 11, 2020

Comments:0

தனியாா் பள்ளிகளில் இரண்டாம் கட்ட இலவச சோ்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி தனியாா் பள்ளிகளில் எஞ்சியுள்ள 55 ஆயிரம் இடங்களுக்கு பெற்றோா் திங்கள்கிழமை (அக்.12) முதல் விண்ணப்பிக்கலாம் என தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.அதன்படி 8,608 தனியாா் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15,771 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கைக்கு 86,318 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதைத்தொடா்ந்து மீதமுள்ள 55,000 இடங்களை நிரப்புவதற்கான 2-ஆம் கட்ட சோ்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.இதையடுத்து பெற்றோா் அக்.12-ஆம் தேதி திங்கள்கிழமைமுதல் நவ.7-ஆம் தேதி வரை இணையதள மூலம் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.இதுதவிர தோ்வான மற்றும் நிராகரிக்கப்பட்ட மாணவா்களின் விவரம் பள்ளிகளில் நவ.11-ஆம் தேதி தெரிவிக்கப்படும். ஒரு பள்ளியில் விண்ணப்பங்கள் அதிகளவில் வந்திருந்தால் நவ.12-ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். அதன் பின் தோ்வான மாணவா்களை நவ.15-ஆம் தேதிக்குள் பள்ளிகளில் சோ்க்கை வழங்க வேண்டும் என்று தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews