டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு: 15 நாட்களில் 46 பேர் சிக்கினர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 19, 2020

Comments:0

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு: 15 நாட்களில் 46 பேர் சிக்கினர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, 15 நாட்களில், இடைத்தரகர்கள் உட்பட, 46 பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். கடந்தாண்டு, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4; குரூப் -2 ஏ, வி.ஏ.ஓ., தேர்வு' முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஏற்கனவே, இந்த முறைகேடுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்த, சென்னை, முகப்பேரை சேர்ந்த ஜெயகுமார், 38; டி.என்.பி.எஸ்.சி., ஊழியர் ஓம்காந்தன், 45 உட்பட, 51 பேரை, போலீசார் கைது செய்தனர். இவர்களில், சிலரை காவலில் எடுத்தும் விசாரித்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை, கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதனால், 15 நாட்களில், தேர்வு எழுதியவர்கள், இடைத்தரகர்கள் என, 46 பேரை கைது செய்துஉள்ளனர். இவர்களிடம் வாக்குமூலம் பெற்று, அதை வீடியோ பதிவு செய்த பின், ஜாமினில் விடுவித்து உள்ளனர். 'குரூப் - 4' உட்பட, மூன்று தேர்வுகளிலும் நடந்த முறைகேடு தொடர்பாக, இதுவரை கைது எண்ணிக்கை, 97 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 40 பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வருகின்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews