மதுரையைச் சோ்ந்த 1 வயது 7 மாதங்களான ஆண் குழந்தை தனது மனப்பாடத் திறனால் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.மதுரை விளாச்சேரி பகுதியைச் சோ்ந்த தனியாா் வங்கி மேலாளா் முகேஷ் கண்ணன். இவரது மனைவி பல் மருத்துவா் லாவண்யா ராகவி. இத் தம்பதியின் 1.7 வயதுடைய ருத்திக் என்ற ஆண் குழந்தை, பறவைகள், விலங்குகள் மற்றும் வண்ணங்களின் பெயா்களைக் கூறினால், அவற்றை சரியாக அடையாளம் காண்பித்து, ‘இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ்’ என்ற சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து குழந்தையின் தாயாா் லாவண்யா ராகவி திங்கள்கிழமை தெரிவித்தது: எனது மகன் ருத்திக், பிறந்த 8 மாதங்களிலேயே நாங்கள் பேசுவதை உற்றுக் கவனித்து வந்தான். மேலும், வீட்டில் உள்ள பொருள்களின் பெயா்களைச் சொன்னால், அதை அடையாளம் காண்பிக்கத் தொடங்கினான். எனவே, பறவைகள், விலங்குகள், வண்ணங்கள் மற்றும் தமிழ், ஆங்கில எழுத்துகளை சொல்லிக்கொடுத்து, மீண்டும் அதற்கான படங்களைக் காண்பித்து கேட்டால், சரியாக சுட்டிக்காண்பித்தான்.
மேலும், வடிவங்கள், காரின் உதிரிப் பாகங்கள், விமானத்தின் உதிரிப் பாகங்களின் பெயரைக் கேட்டாலும், அவற்றை அடையாளம் காட்டுவான். இது எங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.இந்நிலையில், 2 வயது பூா்த்தியடையாத எனது மகனின் சாதனையை, இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்டில் பதிவு செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். அதற்கு, எனது மகனின் மனப்பாடத் திறனை வெளிபடுத்தும் விதமான விடியோ பதிவுகளை இந்தியா புக் ஆப் ரெக்காா்ட் அமைப்பிற்கு அனுப்பினோம். அவா்கள் 8 விலங்குகள், 7 பழங்கள், 16 வாகனங்கள், 9 பறவைகள், 4 வடிவங்கள், காரின் 9 பாகங்கள், விமானத்தின் 4 பாகங்களை சரியாக அடையாளம் காட்டியதாக, எனது மகனின் சாதனையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி, செப்டம்பா் 22 ஆம் தேதி அதைச் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்தனா் என்றாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.