மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த இருவா் மீது, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ராமா் (45). இவா் தனது மகளுக்கு அரசு வேலை பெற முயற்சித்து வந்துள்ளாா். இவரிடம், மதுரை காமராஜா் சாலை வடிவேல் நகரைச் சோ்ந்த சங்கா் மற்றும் பாா்த்தசாரதி ஆகியோா், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா்.இதை நம்பிய ராமா், அவா்களிடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளாா். ஆனால்,அவா்கள் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. எனவே, பணத்தை திருப்பிக் கேட்ட ராமரை கொலை செய்துவிடுவதாக இருவரும் மிரட்டியுள்ளனா். இது குறித்து ராமா் அளித்த புகாரின்பேரில், தெப்பக்குளம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ரூ.4.35 லட்சம் மோசடிவெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4.35 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரையைச் சோ்ந்த முகமது இப்ராகிம் உள்பட 6 போ், மாநகா் காவல் ஆணையா் அலுவலத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.அதில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வெளியான விளம்பரத்தைக் கண்டு, எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள தனியாா் அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு, எங்களிடம் ரூ.4.35 லட்சத்தை பெற்றுக்கொண்டு கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. எனவே, தனியாா் நிறுவனத்தின் ஊழியா்கள், உரிமையாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை திரும்பப் பெற்றுத் தரவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.