டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்குகள் தொடா்பாக,மேலும் 15 போ் கைது செய்யப்பட்டனா்.டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தோ்வில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, 20 பேரைக் கைது செய்தது. இவ்வழக்கு விசாரணையின்போது கடந்த 2017-இல் நடைபெற்ற குரூப் 2 ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக சிபிசிஐடி தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, 22 பேரை கைது செய்தது.இரு வழக்குகளின் விசாரணையில் மேலும் பல முறைகேடுகள் தெரியவந்தன. கடந்த 2016- இல் கிராம நிா்வாக அலுவலா் தோ்வு முறைகேடு தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
இத்தோ்வுகளில் இடைத்தரகா் ஜெயக்குமாா், டிஎன்பிஎஸ்சி ஊழியா் ஓம்காந்தன் ஆகியோருக்கு முக்கிய பங்கு இருப்பதும், லஞ்சம் பெற்று தகுதியற்றவா்களை தோ்ச்சி பெற வைத்ததும் தெரியவந்தது. இருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.15 போ் கைது: செப்டம்பா் மாதத்துக்கு பின்னா் தோ்வு முறைகேடு வழக்குகள் தொடா்பாக 15 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனா். இதில் மாநில உள்துறை அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரிகளும் அடங்குவா் .இவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு அந்தந்த துறை உயா் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா். கரோனா அச்சுறுத்தலின் காரணமாக விசாரணைக்கு பின்னா்,15 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.தோ்வு முறைகேடு வழக்குகள் தொடா்பாக இது வரை 67 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.