பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 22, 2020

Comments:0

பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அசாம்,ஜம்முகாஷ்மீர், கர்நாடகம், ஹரியானா, உள்ளிட்ட மாநிலங்கள், கொரோனா பேரிடரின் தாக்கத்துக்கு ஏற்ப சில விதிமுறைகளுடன், உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி, அசாம் மாநிலத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் சோதனை முறையில் 15 நாள்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்த 15 நாள்களும் பள்ளிகள் இயங்கிய பிறகு, அடுத்தக்கட்ட நெறிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக மாணவர்கள் அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் வழக்கமான வகுப்பறைகள் போல் அல்லாமல், இன்று முதல் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, பாடத்தில் சந்தேகம் இருக்கும் மாணவ, மாணவிகள் மட்டும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டு செல்ல அந்த மாநில பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுபோலவே, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், இமாச்சல், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வருகை கட்டாயமாக்கப்படாமல், விருப்பம் உடையவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews