கொரோனா முகாம்களால் கல்லுாரி திறப்பு தள்ளிவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 30, 2020

Comments:0

கொரோனா முகாம்களால் கல்லுாரி திறப்பு தள்ளிவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உயர்கல்வி நிறுவனங்களில், கொரோனா தனிமை மற்றும் சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதால், கல்லுாரிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் அறிவிப்புப்படி, உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வுகளும் முடிந்து விட்டன.
இந்நிலையில், புதிய கல்வி ஆண்டுக்கு கல்லுாரிகளை, நவம்பர், 1 முதல் திறக்கலாம் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கல்லுாரிகள் எப்போது திறக்கப்படும் என்ற, கேள்வி எழுந்து உள்ளது. இது குறித்து, உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன் கூறியதாவது: கொரோனா நோய் பரவல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாக, பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களின், ஒரு பகுதியில், கொரோனா முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை அளித்தல், தனிமைப்படுத்துதல்போன்றவற்றுக்கு, கொரோனா முகாம்களாக, கல்லுாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ந்த முகாம்கள் செயல்படும் நிலையில், கல்லுாரிகளை திறக்க வாய்ப்பில்லை. எனவே, கொரோனா தொற்று பிரச்னை முடிவுக்கு வரும் நிலையில், நிபுணர் குழு ஆய்வு செய்து, உரிய பரிந்துரை வழங்கும். பின், கல்லுாரி திறப்பு குறித்த தேதியை முடிவு செய்து, முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews