அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு UGC விதிகளுக்கு எதிரானது: AICTE திட்டவட்டம்.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 30, 2020

Comments:0

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு UGC விதிகளுக்கு எதிரானது: AICTE திட்டவட்டம்..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. கல்லூரி இறுதி பருவத் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம் என முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில் ஏஐசிடிஇ பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை ரத்து செய்யகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அரியர் தேர்வு எழுதாத மாணவர்களும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு யூஜிசி மற்றும் ஏஐசிடிஇயின் விதிகளுக்கு முரணானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி மையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி மையம் தனது பதிலை இன்று தாக்கல் செய்துள்ளது.அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி மையம் தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவில், பொறியியல் மாணவர்கள் அனைத்துத் தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்றால்தான் பட்டம் வழங்கப்படும். கல்லூரி இறுதியாண்டு தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தோம். மேலும், இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை நடத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் இதுபோன்ற உத்தரவுகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, பல்கலைக்கழகங்களின் மாண்பும் கெடும். 25 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வில் தோல்வியடைந்தவர்களையும், 25 பாடங்களுக்கும் மேலாக அரியர் வைத்துள்ள மாணவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பது ஏற்புடையதல்ல.தேர்வை தன்னம்பிக்கையுடன் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்களின் மனஉறுதி மேம்படும். சிண்டிகேட், செனட் மற்றும் அகாதெமிக் கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு நடைமுறைகளில் தமிழக அரசு தலையிட்டு அறிவிப்பை வெளியிட முடியாது. எனவே இதுதொடர்பான அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews