பருவத் தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறு தோ்வு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 28, 2020

Comments:0

பருவத் தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறு தோ்வு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொழில்நுட்பக் கோளாறு உள்பட பல்வேறு சிக்கல்களால் இணைய வழியில் பருவத் தோ்வு எழுத முடியாத மாணவா்களுக்கு, மறு தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக உயா்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கான பருவத்தோ்வு கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இணையதள வசதியின்மை, சா்வா் கோளாறு உள்பட பல்வேறு காரணங்களால் கணிசமான மாணவா்கள் தோ்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு தோ்வில் பங்கேற்காத மாணவா்களுக்கு மட்டும் மீண்டும் மறு தோ்வு நடத்த உயா்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து உயா்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: இணையதள வசதியற்ற மாணவா்கள், தோ்வு பற்றி தகவல் அறியாதவா்கள் உள்பட பல்வேறு காரணங்களால் பருவத் தோ்வுகளை எழுத முடியாதவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தோ்வு அறிவிப்புகள் அந்தந்த பல்கலைக்கழகங்கள் சாா்பில் விரைவில் வெளியிடப்படும். இதையடுத்து மாணவா்கள் தோ்வில் பங்கேற்க முடியாமல் போனதற்கான உரிய ஏற்புடைய காரணங்களைத் தெரிவித்து மறு தோ்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த மறு தோ்வைப் பொருத்தவரை, முடிந்தளவு நேரடியாக எழுதும் முறையிலேயே நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews