குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம் அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 26, 2020

Comments:0

குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம் அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வெளி மாநிலங்களில் தமிழ்வழி பள்ளிகள் மூடப்படும் போதெல் லாம் அதற்கு எதிராக தமிழகத்தில் இருந்து பல்வேறு கட்சிகள் குரல் கொடுப்பது வாடிக்கை. அப்பள்ளி கள் ஏன் மூடப்படுகின்றன என்ற அடிப்படை தெரியாமல் அரசியல் செய்வதே இதற்கு காரணம் என்று கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் தில், தமிழ்ச் சங்கத்தால் தமிழ்வழி மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட் டது. அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டுவந்த அப்பள்ளி, தற்போது மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் வசிக்கும் தமி ழர்கள், தாய்மொழியான தமிழை நேசித்தாலும், ‘தாங்கள் வசிக்கும் மாநில மொழியும், ஆங்கிலமும் தான் அங்கு முன்னேற்றத்துக்கு உதவும்’ என்று நினைக்கிறார்கள். இதனால் ‘தமிழை ஏன் படிக்க வேண் டும்?’ என்ற எண்ணமும் உருவாகி யுள்ளது. அப்படியே அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர நினைத்தாலும், அங்கு உள்ள அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். அரசுப் பள்ளி களின் நிலை நாடு முழுவதும் ஒன்று தான். அதனால், தமிழ் படிக்க தர மான பள்ளிகள் இல்லை. தமிழர் களே தமிழ் பள்ளிகளில் மாணவர் களை சேர்ப்பது இல்லை. அகமதா பாத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தமிழர் வசிக்கும் அனைத்து பகுதி களிலும் இதே நிலைதான் உள்ளது. பெங்களூருவில் கடந்த 6 ஆண்டு களுக்கு முன்பு தமிழர் தேசிய முன் னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறும்போது, ‘‘வாழ்வாதாரத்துக் காக பிற மொழிகளை தமிழர்கள் படிக்கலாம். தமிழுக்கு உள்ள மொழிச் சிறப்பு, உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை. அது தமிழ னின் அடையாளம். தமிழ் மக்கள் இதை உணர்ந்து தமிழை எழுத, படிக்க கற்க வேண்டும்’’ என்று அறி வுரை கூறினார். இன்று பெங்களூரு தமிழ்ச் சங்கமும், வேலைவாய்ப்புக் காக வேறு மொழியை கற்றாலும், தமிழர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் வார இறுதி நாட்களில் தமிழ் கற்றுக் கொடுக்கிறது. அதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. கடந்த 2 தலைமுறையாக தமிழ் பேச மட் டுமே தெரிந்தவர்களில் கணிசமா னோர் இப்போது எழுத, படிக்க கற்று வருகின்றனர். வெளி மாநிலங்களில் தமிழ் பள் ளிகள் மூடப்படுவது குறித்து பெங்க ளூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலை வர் தி.கோ.தாமோதரன் கூறியதா வது: மாணவர் சேர்க்கை இல்லாத தால், கர்நாடகாவிலும் தமிழ் வழி அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. இதையும் ஒரு தரப்பினர் சர்ச்சை யாக்கினர். பெங்களூரு தமிழ்ச் சங் கம் நடத்தும் பள்ளியும் அத்தகைய சிக்கலை இப்போது சந்திக்கிறது. தமிழ் கற்றுக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகளும் தங்கள் பள்ளிகளில் அதே காரணங்களுக்காக தமிழ் வகுப்புகளை நீக்கிவிட்டன. இத்த னைக்கும் பெங்களூருவில் தமிழர் கள் 30 சதவீதம் பேர் வசிக்கின்றனர். கோலார் தங்கவயல் பகுதி முழு வதும் தமிழர்கள்தான். தமிழகம் போலவே உணர வைக்கக்கூடிய அப்பகுதியில்கூட தமிழ் வழிப் பள்ளிகள், மாணவர் சேர்க்கை குறைந்ததால் மூடப்பட்டன. கர்நாடக அரசுக்கு யாரும் தமிழ் படிக்கக் கூடாது என்ற நோக்கம் இல்லை. போதிய அளவு மாணவர் கள் இருந்தால் தமிழ்வழிப் பள்ளி களை தொடர்ந்து நடத்த கர்நாடக அரசு தயாராகவே உள்ளது. சொல் லப்போனால், மாணவர் எண் ணிக்கை குறைந்ததால் கர்நாடகா வில் உள்ள சில கன்னட வழி அர சுப் பள்ளிகள்கூட மூடப்பட்டன. கர்நாடகாவில் வசிக்கும் தமிழர் களுக்கு தமிழ்ப் பற்று இருக் கிறது. தமிழ் கற்கவும், தங்கள் குழந்தைகளை தமிழ்வழியில் படிக்க வைக்கவும் விரும்புகின்ற னர். ஆனால் அரசுப் பள்ளிகளின் தரம் சுமாராக இருப்பதால், அதில் பிள்ளைகளை சேர்க்க விரும்புவது இல்லை. தரமான தனியார் பள்ளி களில் தமிழ்வழி கல்வி இல்லை. அதனால் கிடைத்த மொழியில் படிக்கின்றனர். தனியாருக்கு நிகரான கல்வித் தரம் அரசுப் பள்ளிகளில் கிடைத்தால், நிச்சயம் அவர்களது முதல் தேர்வு தமிழ் வழி கல்வியாகவே இருக்கும். எனவே, பிற மாநிலங்களில் தமிழ்வழி அரசுப் பள்ளிகள் மூடப் படுவதற்கு, அப்பள்ளிகளின் குறை வான தரமும், அதன் காரணமாக மாணவர் எண்ணிக்கை குறை வதுமே காரணம். இதை சரிசெய் யாமல், தமிழக அரசு அல்லது பிற மாநில அரசுகளுக்கு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் தீர்வு கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews