பள்ளிக் கல்வி 2020-2021ஆம் கல்வியாண்டில் கொரானோ தீநுண்மி பரவல் காரணமாக பொது முடக்கம் இணையவழி வகுப்புகள் நடத்துதல் ஒரு வார காலம் 21.09.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள் நிறுத்தி வைக்க அறிவுறுத்தல் - தொடர்பாக - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 18, 2020

Comments:0

பள்ளிக் கல்வி 2020-2021ஆம் கல்வியாண்டில் கொரானோ தீநுண்மி பரவல் காரணமாக பொது முடக்கம் இணையவழி வகுப்புகள் நடத்துதல் ஒரு வார காலம் 21.09.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள் நிறுத்தி வைக்க அறிவுறுத்தல் - தொடர்பாக - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேலம் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்:9532/43/2020, நாள்:17.09.2020
பொருள்:
பள்ளிக் கல்வி - 2020-2021ஆம் கல்வியாண்டில் கொரானோ தீநுண்மி பரவல் காரணமாக பொது முடக்கம் - இணையவழி வகுப்புகள் நடத்துதல் - ஒரு வார காலம் 21.09.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள் நிறுத்தி வைக்க அறிவுறுத்தல் - தொடர்பாக
பார்வை : 1 அரசுக் கடித (1டி) எண்:127, பள்ளிக்கல்வித் துறை, நாள்:16.09.2020.
2. சென்னை - 06, தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரக ந.க.எண்:1401/அ1/2020-3, நாள்:16.09.2020. அனைத்து வகைப் பள்ளிகளிலும் 21.09.2020 முதல் 25.09.2020 வரை 5 நாட்களுக்கு இணைய வழி வகுப்புகள் எடுப்பதை நிறுத்தி வைக்குமாறும், அவ்வாறு பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் நிறுத்தி வைத்துள்ளதை உறுதி செய்து கொள்ளவும் பார்வை-1 மற்றும் 2ல் கண்டுள்ள கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் 21.09.2020 முதல் 25.09.2020 வரை 5 நாட்களுக்கு இணையவழி வகுப்புகள் எடுப்பதை நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இச்செயல்பாட்டில் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் தனிக்கவனம் செலுத்தி செயல்படுமாறும், புகார்கள் பெறப்படும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட எந்தவொரு பள்ளியிலும் 21.09.2020 முதல் 25.09.2020 வரை இணையவழி வகுப்புகள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்திடுமாறும், அனைத்து வகைப் பள்ளிகளிலிருந்து இணையவழி வகுப்புகள் நடைபெறவில்லை என்பதற்கான ஒப்புகையினைப் பெற்று கோப்பாக பராமரித்திடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒம்/- து.கணேஷ்மூர்த்தி
முதன்மைக் கல்வி அலுவலர், சேலம்.
பெறுநர்..
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்,சேலம் மாவட்டம்.
(உரிய தொடர் நடவடிக்கையின் பொருட்டு) அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், சேலம் மாவட்டம்.
(உரிய தொடர் நடவடிக்கையின் பொருட்டு) அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்கள், சேலம் வருவாய் மாவட்டம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews