மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரிகள் நிர்வாகிகள் சங்க செயலர் ராஜகோபால், அமைச்சருக்கு அனுப்பியகடிதம்:
தமிழகத்தில் கொரோனாவால் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. நேரடி விண்ணப்ப முறைக்கு தடை விதித்து, &'ஆன்லைன்&' விண்ணப்ப முறை அமல்படுத்தப்பட்டது.கிராமப்புற மாணவர்கள், நகர் பகுதிக்கு வந்து, தனியார் ஆன்லைன் மையங்களில், 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கின்றனர்.
பொது பஸ் போக்குவரத்தும் இல்லை. &'ஆன்லைன்&' பதிவு உட்பட பல்வேறு நடைமுறை சிக்கலால் தனியார் கல்லுாரிகளில், 30 சதவீதமே மாணவர் சேர்ந்துள்ளனர். இது உயர்கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆக., 24 முதல் ஆன்லைன் வகுப்பு துவங்க, மதுரை காமராஜ் பல்கலை உத்தர விட்டுள்ளது. இது ஏற்புடையது அல்ல. இப்பல்கலைக்கு கீழ், 53 தனியார் கல்லுாரிகள் உள்ளன.ஜூலை, 20ல் ஆன்லைன் பதிவு துவங்கியது.
ஆக., 1 முதல், 10 வரை சான்றிதழ் பதிவேற்றம் நடந்தது. &'நெட்ஒர்க்&' பிரச்னையால் பதிவேற்ற பணிகள் ஸ்தம்பித்துள்ளன. எனவே, மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும். தனியார் கல்லுாரிகள் சேவை மையங்கள்துவங்கி, கட்டணமில்லா ஆன்லைன் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். செப்., 10க்கு பின் அல்லது தனியார் கல்லுாரிகளில், 90 சதவீதம் மாணவர் சேர்க்கை நடந்த பின், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups