பள்ளி வளாகத்திலிருந்து 50 மீட்டருக்குள் ஜங் புட் விற்பனைக்கு தடை... அதிரடி உத்தரவு ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 11, 2020

Comments:0

பள்ளி வளாகத்திலிருந்து 50 மீட்டருக்குள் ஜங் புட் விற்பனைக்கு தடை... அதிரடி உத்தரவு !

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை உறுதி செய்யும் நோக்கில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
FSSAI தலைமை நிர்வாக அதிகாரி அருண் சிங்கால், பள்ளிகளின் கேன்டீன்களில் ஜங் புட் மற்றும் ஆரோக்கியமற்ற உணவை விற்பனை செய்வதை தடை விதிப்பதாக கூறியுள்ளார். மேலும் பள்ளி வளாகத்திலிருந்து 50 மீட்டருக்குள் ஆரோக்கியமற்ற உணவை விற்பனை செய்வதற்கும் விளம்பரம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலில், FSSAI புதிய கொள்கை ஒழுங்குமுறையை கொண்டுவருகிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டத்தின் கீழ், இது பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பான, சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணவு மற்றும் சீரான உணவை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. முன்னதாக வழக்கு ஒன்றின் தொடர்பாக, பள்ளி கேண்டீன்களில் விற்கப்படும் ஜங் புட் உணவை ஒழுங்குபடுத்த FSSAI க்கு 2015 ஆம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பிறகு, உயர்மட்ட உணவு ஒழுங்குபடுத்தும் நிறுவனத்தின் வல்லுநர்கள் குழு அத்த உத்தரவின் படி புதிய வழிகாட்டுதல்களை ரத்து செய்து, இதனால் குழந்தைகளுக்கு குழந்தைகள் ஆரோக்கியமான உணவைப் பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பள்ளிகளில் கேன்டீன், சமையலறை இயங்குவதற்காக FSSAI-யிடமிருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த கல்வித் துறையால் ஒப்பந்தம் செய்யப்பட்டு, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின் அட்டவணை 4 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளின் படி செயல்படுவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநில நிர்வாகத்தின் வழக்கமான ஆய்வு பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்படும் என்று FSSAI துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN ) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் சீரான உணவை உட்கொள்வதை பள்ளி அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews