அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் விலையில்லா புத்தகம் மற்றும் புத்தகப் பை வழங்கும் பணி தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 03, 2020

Comments:0

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் விலையில்லா புத்தகம் மற்றும் புத்தகப் பை வழங்கும் பணி தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. புத்தகங்களை வாங்க வரும் மாணவர்கள், பெற்றோர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் நிலையில் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே புத்தகங்களை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்துப் புத்தகங்கள், புத்தகப் பைகளை வாங்கிச் சென்றனர்.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகம் வழங்கும் பணி இன்று தொடங்கியது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் 16-ம் தேதியிலிருந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்கள் முடிந்த நிலையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போயுள்ளது. இதற்கிடையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆன்லைன் கல்வியைப் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. இன்று முதல் தனியார் தொலைக்காட்சிகளிலும் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இதனால் பாடப்புத்தகங்கள் இருந்தால் மாணவர்கள் எளிதில் படிக்க முடியும் என்று கல்வித்துறை கருதியது. இதனை முன்னிட்டு அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் விலையில்லாப் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் 2 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசப் பாடநூல் மற்றும் புத்தகப் பைகள் வழங்கும் பணி தொடங்கியது. இவற்றை வாங்க வரும் மாணவர்களும் பெற்றோரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், 1 மணி நேரத்தில் 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முடிந்த பிறகு, அவர்களைப் பள்ளிக்கு அழைத்து பாடநூல்கள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews