கடன் வசூல் தீர்ப்பாய பதவிக்கு வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 02, 2020

Comments:0

கடன் வசூல் தீர்ப்பாய பதவிக்கு வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடன் வசூல் தீர்ப்பாய உறுப்பினர் பதவிக்கு, தகுதியுள்ள வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
கடன் வசூல் தீர்ப்பாய உறுப்பினர் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். பழைய விதிகளின்படி, 10 ஆண்டு, 'பிராக்டீஸ்' மற்றும் அதிகபட்சம், 50 வயது வரை உள்ள வழக்கறிஞர்கள், இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.இந்த ஆண்டு பிப்ரவரியில், விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, தீர்ப்பாய உறுப்பினர் பதவிக்கு, வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்க முடியாது. நீதித்துறையில் குறைந்தபட்சம், 10 ஆண்டு பதவி வகிப்பவர்கள் தான் விண்ணப்பிக்க முடியும்.புதிய விதியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடன் வசூல் தீர்ப்பாய வழக்கறிஞர்கள் சங்கம் மனுதாக்கல் செய்தது. தீர்ப்பாய உறுப்பினர் பதவிக்கு, வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்க, அனுமதி அளிக்கும்படி கோரப்பட்டது. இம்மனு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எல்.சந்திரகுமார், மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராயினர்.இரு தரப்பு வாதங்களுக்கு பின், 'தீர்ப்பாய உறுப்பினர் பதவிக்கு, தகுதியுள்ள வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்க தடையில்லை' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. பிரதான வழக்கு விசாரணையை, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews