506 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: அண்ணா பல்கலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 29, 2020

Comments:0

506 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: அண்ணா பல்கலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் பொறியியல் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக, தமிழகத்தில் பொறியியல் படிப்புகான மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாவுக்கான பணிகள் துவங்கியுள்ளன.
அதன்படி தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 2020-2021ம் கல்வியாண்டில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்ட பட்டியலின் அடிப்படையில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழங்கள் என 500 பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளது. வருடா வருடம் பொறியியல் பட்டதாரிகள் அதிகளவு பட்டம் பெற்று வெளியே வந்தாலும், அவர்களுக்கான தகுந்த வேலைவாய்ப்பு என்பது கிடைப்பதில்லை. இதனால் பொறியியல் பட்டபடிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களிடையேயான ஆர்வம் தற்போது குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், தற்போது பொறியியல் பட்டபடிப்புகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
அதாவது தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் மொத்தம் 2,94,570 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், இவற்றில் இளநிலை படிப்புகளுக்கான B.E, B.Tech உள்ளிட்டவற்றில் மொத்தம் 2,64,264 இடங்கள் உள்ளன. தொடர்ந்து, முதுகலை பொறியியல் படிப்புகளை வழங்கும் 357 கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்களில் மொத்தம் 30,306 இடங்கள் உள்ளன. பின்னர், இதனைத்தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் ஒரு பொறியியல் கல்லூரி, முதுகலை பொறியியல் பட்டப்படிப்பை துவங்குவதற்கான அனுமதியினையும் பெற்றுள்ளது. இதேபோல் 3 கல்லூரிகள் புதிதாக இளநிலை பட்டப்படிப்புகளை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் பொறியியல் படிப்புகளில் மொத்தம் 2,94,570 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வினை செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 6ம் தேதி வரை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் பல்வேறு கல்லூரிகள் உள்ளன. இதனால் இந்த ஆண்டு பொறியியல் இடங்கள் குறித்து தனியாக உயர்கல்வித்துறை விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews