பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி! - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தேர்வு தள்ளிப்போனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கும்"
தேர்வு நடத்துவது நல்லது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர்
10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை
தேர்வை தள்ளிவைப்பது மாணவர்களின் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் , தேர்வு நடத்துவது நல்லது , அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
10-ம் பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைகிளை தள்ளுபடி செய்துள்ளது. 10-ம் பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் குறைவாக மாவட்டஙகளில்தான் அதிக பாதிப்பு உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து, மாநில அரசின் முடிவில் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், தேர்வை தள்ளிப்போடுவது மாணவர்களின் மனஅழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா அதிகமாக இருப்பதை அறிந்தே அரசு முடிவு எடுத்திருக்கும். அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்வதை தமிழகத்துடன் ஒப்பிடக்ககூடாது. 10-ம் வகுப்பு தேர்வு எழுத மாணவ-மாணவிகள் தயார் நிலையில் இருக்கிறார்களா? மனநல சிக்கல்கள் மீது உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்ய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி:
இதற்கிடையே, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், த்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றார். பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும். சூழ்நிலை மற்றும் பெற்றோர்கள் மனநிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.
பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்றார். மாணவர்களின் நலன் கருதி கல்வி ஆலோசகர்கள் கருத்தை கேட்டு முதல்வர் பழனிசாமி முடிவெடுப்பார். பாடங்களை குறைப்பது குறித்தும் நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோள் பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் பொதுத்தேர்வை தள்ளிவைக்கவோ நிறுத்தவோ பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பியதில்லை .இருப்பினும் தேதேர்வை ரத்து செய்ய வேண்டும் தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் விரும்புவதாக பள்ளிக்கல்வித்தறைக்கு கோரிக்கை வைப்பதும் உய்நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்வதும் தங்களது தவறான கருத்து.இதனால்பொதுமக்களிடத்தில் ஆசிரியர்களுக்கு மதிப்பும் மரியாதையும் குறைந்து வருகிறது. தங்களுக்கு கொரோனா பயம் இருந்தால் தாங்கள் விடுப்பு எடுத்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் அட்டவணைப்படி.தேர்வு நடத்த தயாராக இருக்கிறோம்
ReplyDelete