சிறப்புப் பயிற்றுநா்களுக்கு முழுஊதியத்தை வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 03, 2020

Comments:0

சிறப்புப் பயிற்றுநா்களுக்கு முழுஊதியத்தை வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஏப்ரல் மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்றுனர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் மாநில திட்ட இயக்குனர் உத்தரவு
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சிறப்புப் பயிற்றுநா்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.தமிழக அரசுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 2 லட்சம் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு கல்வி பயிற்றுவிக்க 1998-ஆம் ஆண்டு 1,761 சிறப்புப் பயிற்றுநா்கள் பணிநியமனம் செய்யப்பட்டனா். இவா்களுக்கு தொகுப்பூதியமாக மாதந்தோறும் ரூ.16 ஆயிரமும், போக்குவரத்து படியாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதற்கிடையே பொது முடக்கம் காரணமாக சிறப்பு பயிற்றுநா்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன. ​ இந்த நிலையில் சிறப்பு பயிற்றுநா்களுக்கு பிடித்தமின்றி முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பொது முடக்கம் அமலில் உள்ள தற்போதைய சூழலில் சிறப்புப் பயிற்றுநா்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கான முழு ஊதியத்தை (போக்குவரத்துப்படி உள்பட ) ஏப்ரல் முதல் அனைத்து மாதங்களுக்கும் வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews