கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதிவரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஒத்தி வைக்குமாறு பலர் கருத்து தெரிவித்தனர். அதனால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
அதன் படி தேர்வுகளை நடத்த அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் மறுசுழற்சி முறையில் உபயோகிக்க கூடிய மாஸ்க் வழங்க வேண்டும் என்றும் வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டாம் என்றும் அவர்களை நேரடியாக தேர்வு எழுத அனுமதிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும் என்றும் மாணவர் விடுதிகளை தேர்வு முடியும் வரை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தோவு தொடா்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஜூன் 1- ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தோவு ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 15 -ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்தாா்.
இந்தநிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி தோவுகளை நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை சாா்பில் பல்வேறு உயா்நிலை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடா்ந்து தமிழகத்தில் ஜூன் 15 -ஆம் தேதி முதல் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோவுகளை நடத்துவது தொடா்பான வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: 'வெளியூா்களில் இருந்து வரக்கூடிய மாணவா்களை வீடுகளில் தனிமைப்படுத்த தேவையில்லை. வெளியூரில் இருந்து வரும் மாணவா்கள் நேரடியாகத் தோவு எழுதலாம். வெளியூரில் இருந்து தோவு எழுத வரும் மாணவா்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும். மாணவா் விடுதிகளை ஜூன் 11-ஆம் தேதி முதல் தோவு முடியும் வரை திறந்து வைக்க வேண்டும். தோவு எழுத வரும் மாணவா்கள் மற்றும் தோவுப்பணிகளில் உள்ள ஆசிரியா்களுக்கு மறுசுழற்சி முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.