அனைத்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை! என்ன நடந்தது, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 27, 2020

Comments:0

அனைத்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை! என்ன நடந்தது, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ஆலோசனையில் கலந்து கொண்டார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட இந்த உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீடிக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஏப்ரல் 11ஆம் தேதி முதலமைச்சர்களுடன் பிரதமர் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்குப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை எப்படி எதிர்கொள்வது என்று இன்று ஆலோசனை நடைபெற்றது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் சூழ்நிலையை சமாளிக்க நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது. ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்தும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியா இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 284 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 28 நாட்களில் 18 மாவட்டங்களிலும், கடந்த 14 நாட்களில் 33 மாவட்டங்களிலும் ஒருவர் கூட கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. மணிப்பூர், திரிபுரா, கோவா ஆகிய மூன்று மாநிலங்களும் 100% ஆபத்து இல்லா மாநிலம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். பாதிப்புகள் குறைவாக உள்ள மாநிலங்களுக்கு மட்டும் ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
லாக்டவுன் காலத்தில் தொழில் நடவடிக்கைகளை ஒவ்வொரு கட்டமாக தொடங்க வேண்டும்; குறிப்பாக மாநிலங்களுக்குள் இத்தகைய நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் வலியுறுத்தினார்.
லாக்டவுன் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மாநிலங்களின் முதல்வர்கள் முன்வைத்த யோசனைகளின் தொகுப்பு: மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறுகையில், மே 3-ந் தேதி வரை லாக்டவுனை அமல்படுத்தலாம். அத்தியாவசியப் பொருட்கள் சேவை, மருத்துவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடுகள் அனுமதி வழங்கலாம் என்றார். புதுவை முதல்வர் நாராயணசாமி கூறுகையில், கொரோனா தடுப்பு பணிக்கான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் மத்திய அரசு வழங்க வேண்டும். லாக்டவுனுக்குப் பிந்தைய காலத்தில் தொழிற்சாலைகள் முழு வீச்சில் செயல்படுவதற்கு மானிய உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.
உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பேசுகையில், பொருளாதாரத்தை மீட்க வேண்டியது உடனடித் தேவையாக இருக்கிறது. தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஒவ்வொரு கட்டமாக மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வது கட்டாயம். பொருளாதாரத்தை மீட்பதுதான் தற்போதைய முக்கியமான நடவடிக்கை என்றார். இமாசல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் லாக்டவுனை நீட்டிக்கலாம். பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். அதேநேரத்தில் மாநிலங்களிடையேயான போக்குவரத்துக்கு சிறிது காலம் தடை விதிக்கலாம் என்றார்.
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், லாக்டவுன் காலத்தில் பொதுவான விதிமுறைகள்- கட்டுப்பாடுகளை தேசிய அளவில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவியாக இருக்கும். நிதி ஆயோக் என்பது வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும். தேசிய அளவில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலும் முக்கியமான செயல்பாடுகளை அனுமதிக்க வேண்டும். ஒடிஷாவில் அனைத்து விதமான பொதுமக்கள் ஒன்றுகூடல்களையும் தடை செய்திருக்கிறோம். பொருளாதார நடவடிக்கைகளை மாநிலங்களுக்குள் மட்டுமே மேற்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், போலியோ சொட்டு மருந்து வழங்குவதைப் போல வீடுகள் தோறும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பீகாரில் இதுவரை 4 கோடி பொதுமக்களுக்கு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews