சர்க்கரை கார்டு: இலவச பொருள் கிடைக்குமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 16, 2020

Comments:0

சர்க்கரை கார்டு: இலவச பொருள் கிடைக்குமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரேஷன் கடைகளில், மே மாதத்திற்கான, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்குமாறு, தமிழக அரசுக்கு, சர்க்கரை கார்டு தாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக ரேஷன் கடைகளில், 2.01 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்றவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.எஞ்சிய, 5.50 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி தவிர்த்த, மற்ற பொருட்கள், அதே விலையில் வழங்கப்படுகின்றன.கொரோனா பரவல் தடுப்பு கால நிவாரணமாக, அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாயுடன், இம்மாதத்திற்கு உரிய அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
கோடீஸ்வரர்கள் அல்லசர்க்கரை கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாயும், அரிசியும் தவிர்த்து, மற்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.இந்நிலையில், இம்மாதம், 14ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு, மே, 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.'ஊரடங்கு நீட்டிக்கப்படும் காரணத்தினால் அரிசி கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ பாமாயில், எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை, இலவசமாக வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இது குறித்து, சர்க்கரை கார்டுதாரர்கள் கூறியதாவது:சர்க்கரை கார்டுகள் வைத்திருப்போர், கோடீஸ்வரர்கள் அல்ல.ஊரடங்கால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அரசு சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் நிவாரண தொகையை வழங்காமல், பொருட்களை மட்டும் இலவசமாக வழங்கியது.எதுவும் குறிப்பிடவில்லைஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், அரிசி கார்டுதாரர்களுக்கு, மே மாதத்திற்கு, இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ள அரசு, சர்க்கரை கார்டுதாரர்களை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
இதனால், மே மாத ரேஷன் பொருட்களை வாங்க, சர்க்கரை கார்டுதாரர்கள், பணம் தரும் நிலை ஏற்பட்டுள்ளது.கையில் பணம் இல்லாததால், தங்களுக்கும் அம்மாதத்திற்கு உரிய பொருட்களை இலவசமாக வழங்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews