Search This Blog
Monday, March 23, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் மூன்று தேர்வுகளே உள்ளதால்,
11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்
தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், திட்டமிட்டபடி மார்ச் முதல் வாரத்தில் துவங்கின.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால், பரவலை தடுக்க, நாடு முழுவதும், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பாட திட்டங்களில், பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும், ஏற்கனவே பல பாடங்களுக்கு தேர்வுகள் முடிந்ததால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் தள்ளிவைக்கப்படவில்லை. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும், ஏப்., 15க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 2வுக்கான, வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு, நாளை தேர்வு நடக்கிறது. இதனுடன், பிளஸ் 2வுக்கு அனைத்து பாடங்களுக்கான தேர்வுகளும் முடிகின்றன. பிளஸ் 1 மாணவர்களுக்கு, இன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கின்றன. வரும், 26ம் தேதி, வேதியியல் கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் தேர்வுகள் நடக்கின்றன. அன்றுடன், பிளஸ் 1 தேர்வுகள் முடிகின்றன. கொரோனா பரவலால், பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகள் தள்ளிவைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
11th-12th
CORONA
EXAMS
11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு
11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.