உயிரியல், வணிகக்கணிதம் தேர்வுகள் கடினம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 21, 2020

Comments:0

உயிரியல், வணிகக்கணிதம் தேர்வுகள் கடினம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 உயிரியல் தேர்வில், எதிர்பார்க்காத கேள்விகள் இடம் பெற்றதால், சராசரி மாணவர்கள் பதில் எழுத திணறினர். பிளஸ் 2 பொது தேர்வில், நேற்று உயிரியல், தாவரவியல், வணிக கணிதம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடந்தன.உயிரியலில், 'நீட்' தேர்வு போன்ற கேள்விகள் வரும் என, மாணவர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்காத பல கேள்விகள் இடம் பெற்றன. இதுகுறித்து, தாவரவியல் ஆசிரியர், சவுந்தர பாண்டியன் கூறியதாவது:மாணவர்கள் எதிர்பார்த்த கேள்விகள் இடம் பெறாவிட்டாலும், தேர்ச்சி பெறுவதற்கு பிரச்னை இல்லை. முன்னிலை மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்க வாய்ப்புள்ளது.
மாணவர்களுக்கு அதிக பயிற்சி வழங்கப்படும் வரைபட கேள்விகள் இடம் பெற்றிருந்தால், எளிதாக, மூன்று அல்லது ஐந்து மதிப்பெண்கள் கிடைத்திருக்கும். பெரும்பாலான கேள்விகள், புத்தகத்தில் உள்ள பாடங்களின் அடிப்படையில் தான் இடம் பெற்றுள்ளன. இரண்டு பாடங்களிலும், 40 மதிப்பெண்கள் அளவுக்கு, சிந்தனையை சோதிக்கும், 'ட்ரிக்கி' கேள்விகள் இடம் பெற்றுள்ளன.எந்த வகையில் கேள்வியை மாற்றி கேட்டாலும், பதில் அளிக்கும் அளவுக்கு, வரும் காலங்களில் கற்பித்தல் முறையை, ஆசிரியர்கள் மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 24ம் தேதி மட்டும் ஒரு தேர்வு உள்ளது. அத்துடன் அனைத்து பாடங்களுக்கும் தேர்வுகள் முடிகின்றன. பிளஸ் 1 மாணவர்களுக்கு, 26ம் தேதி தேர்வு முடிகிறது.
பிளஸ் 2 உயிரியல் தோ்வு கடினம்: மாணவா்கள் கருத்து பிளஸ் 2 வகுப்புகளுக்கான உயிரியல், வணிக கணிதம் பாடத்தோ்வுகள் கடினமாக இருந்ததாக மாணவா்கள் கருத்துத் தெரிவித்தனா். தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணினி அறிவியல், விலங்கியல், இயற்பியல், பொருளியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் தற்போது முடிவடைந்துள்ளன. இதற்கிடையே உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான தோ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதில் உயிரியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியல் பாடங்களின் வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். குறிப்பாக, 1 மற்றும் 3 மதிப்பெண் பகுதியில் பல்வேறு கேள்விகள் மறைமுகமாகக் கேட்கப்பட்டதால் மாணவா்கள் சிரமப்பட்டனா். இதனால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுபவா்களின் எண்ணிக்கை சரியும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேநேரம், தாவரவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினா தவிர இதர கேள்விகள் எளிதாக இருந்ததாக ஆசிரியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews