SCERT - ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி கட்டுரை அனுப்பும் போட்டி - கடைசிதேதி 15.03.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 10, 2020

Comments:0

SCERT - ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி கட்டுரை அனுப்பும் போட்டி - கடைசிதேதி 15.03.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ( SCERT ) கலைத்திட்டம் வடிவமைத்தல் , பாடத்திட்டங்கள் வரையறுத்தல் , பாடநூல்கள் உருவாக்குதல் . ஆசிரியர் . மாணவர்களுக்கான கட்டகங்கள் , பயிற்சி ஏடுகளை வடிவமைத்துப் பயிற்சி அளித்தல் , பள்ளிகளைப் பார்வையிட்டுக் கற்றல் கற்பித்தல் மேம்படக் களத்தில் உதவுதல் மேலும் கல்வி சார் செயலாய்வுகள் , ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்ற பல பணிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது . தமிழகத்தின் கல்வித் தரமேம்பாட்டினை உயர்த்தும் வகையில் தேசிய மற்றும் மாநில அளவிலான கருத்தரங்குகளையும் கல்விசார் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தி வருகிறது . அதன் ஒரு பகுதியே இக்கருத்தரங்க நிகழ்வாகும் .
கருத்தரங்கம் : தமிழ் மொழி இலக்கிய , இலக்கண வளம் மிகுந்தது . சொல் வளமும் சொல்லாழமும் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்தது . மொழி இலக்கணத்தோடு வாழ்க்கை இலக்கணத்தையும் வேராகக் கொண்ட உயர்தனிச் செம்மொழி . அடிச்சொல் வேர்ச்சொல்லாகி , ஓரெழுத்து ஈரெழுத்துச் சொல்லாகத் தொடர்ந்து , பிறமொழிச்சொல் ஆக்கமும் பெற்றது . மொழி கற்றலுக்கு முதன்மையான தொல்காப்பியம் , நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது . ஆசிரியருக்கு இலக்கணம் வகுத்த நன்னூலார் , கொள்வோன் கொள்வகை அறிந்து கற்பித்தல் என்ற கல்வியியல் உளவியல் அணுகுமுறையை அன்றே வழங்கியுள்ளார் படித்தல் அறிவைச் சீராக்கிச் செப்பமிட்டு அளிப்பவை பள்ளிகள் . பள்ளிகளில் படித்தலை ஊக்குவிப்பவர்கள் ஆசிரியர்கள் . ஆசிரியர்களின் சிறந்த , புதுமையான உத்திகளும் அணுகுமுறைகளும் படித்தலை வலுவூட்டும் . அத்தகு உத்திகளைக் கண்டறிந்து பரவலாக்கும் பொருட்டு மனிதவள மேம்பாட்டுத்துறையின் நிதி உதவியுடன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , தமிழ்மொழி படித்தல் திறன் மேம்பாட்டிற்கான செயலாக்க அணுகுமுறைகள் எனும் தலைப்பில் மாணவர் கற்றல் தரத்தை உயர்த்தும் நோக்கில் மாநில அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews