👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஜே.இ.இ., முதல் கட்ட நுழைவு தேர்வு துவங்கியது. முதல் நாளில் கட்டட தொழில்நுட்ப படிப்புக்கு தேர்வு நடத்தப்பட்டது.
பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பொது தேர்வுக்கு பின் மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்பில் சேர ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் முதல் கட்ட நுழைவு தேர்வு நேற்று துவங்கியது; ஜன. 9ம் தேதி வரை நடக்க உள்ளது.
நேற்று முதல் நாளில் கட்டடம் மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்ப படிப்புகளான பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் படிப்புகளுக்கு தேர்வு நடந்தது. இன்று முதல் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு தேர்வு நடக்க உள்ளது.
நேற்றைய தேர்வில் கணித பிரிவு கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், வரைகலை தாள் எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 9.21 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.