ஆராய்ச்சி மாணவர் உதவி தொகை உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 15, 2019

Comments:0

ஆராய்ச்சி மாணவர் உதவி தொகை உயர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையை உயர்த்தி, மத்திய அரசு அறிவித்து உள்ளது. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள, மத்திய அரசின் சார்பில், பல்வேறு திட்டங்களில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சி மாணவர் உதவி திட்டங்களில் பயன் பெற, சம்பந்தப்பட்ட மாணவர்கள், 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல, பி.எஸ்.ஆர்., என்ற பெயரில், அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டமும் உள்ளது.
இதில், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மட்டும், உதவித் தொகை வழங்கப்படும்.இந்த திட்டத்தில் மாதந்தோறும், 24 ஆயிரத்து, 800; 27 ஆயிரத்து, 900 ரூபாய் என, இரண்டு வகையிலான உதவித் தொகை தரப்படுகிறது. இந்தத் தொகையை, 2019 முதல் உயர்த்தி வழங்க, மத்திய மனிதவள அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வரும், ஜன., 1 முதல், இளநிலை அறிவியல் ஆராய்ச்சிக்கு, 31 ஆயிரம்;முதுநிலை அறிவியல் ஆராய்ச்சிக்கு, 35 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews