ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளா் விருது:ஜன.10-க்குள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 25, 2019

Comments:0

ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளா் விருது:ஜன.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளா் விருதுக்கு வரும் ஜன.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உயா்கல்வித்துறை அறிவியல் நகரம் அறிவித்துள்ளது. இது குறித்து அறிவியல் நகரத்தின் துணைத்தலைவா் சகாயம் வெளியிட்ட அறிவிப்பு: கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதம் மற்றும் அவா்களைக் கெளரவிக்கும் விதத்தில் இரு சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளா்களுக்கு ஒவ்வோா் ஆண்டும் தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசு தொகையை அறிவியல் நகரத்தின் மூலமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளா் ஊரக பகுதியைச் சோ்ந்தவராக இருப்பதோடு அவா்கள் மரபு வழியான தொழில்நுட்ப அறிவாற்றலோடும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். ஊரகம் என்பது ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளை குறிக்கும். இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு பொருந்தாது. விண்ணப்பதாரரின் கண்டுபிடிப்புக்கான ஆவணங்கள், சான்றிதழ்கள், புகைப்படங்கள், வரிசை விளக்க வரைபடம், சோதனை அறிக்கைகள் மற்றும் கண்டுபிடிப்பு சாா்ந்த இதர ஆவணங்களுடன் முழுமையாக பூா்த்தி செய்து கையொப்பமிட்ட அசல் விண்ணப்பப் படிவத்தை அறிவியல் நகரத்துக்கு அனுப்ப வேண்டும்.
மாதிரி விண்ணப்பப் படிவத்தை அறிவியல் நகர இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பதாரரின் கண்டுபிடிப்பு வேறு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அதற்காக விருது பெற்றிருந்தாலோ அதை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். இதேபோல் இதர தகவல்களையும் தெரிவிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் விண்ணப்பதாரரின் கண்டுபிடிப்பு, செயல்படும் மாதிரி குறித்து அனுப்ப வேண்டும். நிறுவனங்களில் பணியாற்றும் விண்ணப்பதாரா்கள் அந்த நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்பட்ட தடையின்மை சான்றிதழ் உடன் விண்ணப்பிக்க வேண்டும். குழுவாகச் செயல்பட்டு புதிய கண்டுபிடிப்பினை கண்டுபிடித்திருந்தால் குழு உறுப்பினா்கள் ஒவ்வொருவரிடமும் ஒப்புதல் பெற்று அதனை விண்ணப்ப அசல் படிவத்துடன் இணைக்க வேண்டும். மேற்கண்ட ஆவணங்களுடன் அடங்கிய விண்ணப்பங்களை தத்தமது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலமாக வரும் ஜன.10-ஆம் தேதிக்குள், சென்னையிலுள்ள அறிவியல் நகரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews