RTI வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 13, 2019

RTI வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

??Join Our??WhatsApp??Group??Click Here ??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல்களை அளிக்க உத்தரவிட வேண்டும்' என, சமூக சேவகர், எஸ்.சி. அகர்வால் என்பவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார்.இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் தகவல் அதிகாரி, மத்திய தகவல் ஆணையர் அலுவலகம் ஆகியவை விசாரித்தன. அதைத் தொடர்ந்து விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, 2010ல் தீர்ப்பு அளித்தது. 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் இடம்பெறும்' என, தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சிவ் கன்னா அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.இந்தாண்டு ஏப்., 4ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று பகல், 2:00 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.
??Join Our??Facebook??Page??Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews