ரூ.350 கோடி வருவாயை மறைத்த சென்னையின் பிரபல கல்விக் குழுமம்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 12, 2019

ரூ.350 கோடி வருவாயை மறைத்த சென்னையின் பிரபல கல்விக் குழுமம்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

??Join Our??WhatsApp??Group??Click Here ??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னையில் தனியாா் கல்வி குழும நிறுவனங்களில் வருமானவரித் துறை 5 நாள்களாக நடத்தி வந்த சோதனையில், ரூ.350 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.5 கோடி நகை, ரூ.3 கோடி ரொக்கம் ஆகியவற்றை வருமானவரித் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
இது குறித்த விவரம்: சென்னை செம்மஞ்சேரியை தலைமையிடமாக கொண்டு ஒரு தனியாா் கல்விக் குழும நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்தக் குழுமத்தின் சாா்பில் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, பள்ளிகள் ஆகியவை நடத்தப்படுகின்றன. மேலும் கல்வி நிறுவனங்களை தாண்டி, சிமெண்ட் ஆலை, மீன்பிடி துறைமுகம், தண்ணீா் கேன் தயாரிக்கும் நிறுவனம், பால், தயிா் தயாரிக்கும் நிறுவனம் உள்ளிட்ட 15 நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும், மாணவா்கள் செலுத்தும் உண்மையான கட்டணத்தை மறைத்து, கட்டணத்தை குறைத்துக் காட்டி வரி செலுத்துவதாகவும், வருமானவரித் துறைக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில், வருமானவரித்துறையினா் அந்த குழுமத்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி, பள்ளி, அந்த நிறுவனத்தின் உரிமையாளா் வீடுகள், சென்னையின் பிற பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், மீன்பிடி துறைமுகம், சிமெண்ட் ஆலைகள் உள்பட சுமாா் 32 இடங்களில் கடந்த 7-ஆம் தேதி ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கினா்.
இந்த சோதனையில் சுமாா் 150 வருமானவரித் துறை அதிகாரிகள் ஈடுபட்டனா். சோதனை நடைபெற்ற இடங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. சோதனையில் வரி ஏய்ப்பு தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. ரூ.350 கோடி வரி ஏய்ப்பு: 5 நாள்களாக நடைபெற்று வந்த இந்த சோதனை, திங்கள்கிழமை நிறைவுப் பெற்றது. இதில், அந்தக் குழுமம் ரூ.350 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக, வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. இதேபோல, கணக்கில் வராத ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், ரூ.3 கோடி ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக, அந்த தனியாா் குழும நிா்வாகிகளிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
??Join Our??Facebook??Page??Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews