துணைவேந்தர் நியமன இறுதி பட்டியலில் விதிமீறல்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 09, 2019

Comments:0

துணைவேந்தர் நியமன இறுதி பட்டியலில் விதிமீறல்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பாரதியார் பல்கலை துணைவேந்தர் தேடல் குழு, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவில்லை; இறுதி பட்டியல் தயாரிப்பில் பாரபட்சம் உள்ளது' என, குற்றம் சாட்டியுள்ள விண்ணப்பதாரர்கள் சிலர், 'இவ்விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்' என, தமிழக கவர்னருக்கு மனு அனுப்பியுள்ளனர். கோவை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவி, இரு ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதை நிரப்பும் நடவடிக்கை, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பதவிக்கு விண்ணப்பித்த, 147 பேரில், 10 பேர் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளனர்; இவர்களில் மூவரை தேர்வு செய்வதற்கான நேர்காணல், வரும், 15ம் தேதி நடக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், துணைவேந்தர் தேடல் குழுவின் நடவடிக்கை, வெளிப்படை தன்மையின்றி இருப்பதாகவும், தகுதியான நபர்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டு இறுதி பட்டியல் தயாரிப்பில், பாரபட்சம் காட்டியிருப்பதாகவும், கவர்னர் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி, விண்ணப்பதாரர்களில் சிலர், கவர்னருக்கு மனு அனுப்பியுள்ளனர்.பாரதியார் பல்கலையில் இருந்து மட்டும், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், 18 பேர், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், ஒருவர் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், அதிக தகுதியுடைய பலர் நிராகரிக்கப்பட்டுஇருப்பதாகவும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
'நேர்காணல் நடத்தும் முன், 147 விண்ணப்பதாரர்களும் பெற்ற மொத்த மதிப்பெண், மதிப்பெண் பகிர்வு உள்ளிட்ட விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். 'தகுதியான நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பின், இதை வெளியிடுவதில், தேடல் குழு தயங்க வேண்டிய அவசியம் இல்லை; இவ்விபரங்களை வெளியிட கூடாது என, எவ்வித வரையறையும் இல்லை' எனவும், விண்ணப்பதாரர்களில் சிலர் வலியுறுத்துகின்றனர். ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் பூபதி, நமசிவாயம் ஆகியோர் கூறியதாவது: துணைவேந்தர் நியமன விளம்பரத்தை ஆய்வு செய்தாலே, தேடல் குழுவின் தவறுகளை உணர முடியும். விளம்பரத்தில், ஆறு ஆண்டுகள், துறைத் தலைவராகவும், 10 ஆண்டுகள் பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விதிமீறல் பேராசிரியர் என்ற பதவி, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லுாரிகளில் கிடையாது; பல்கலையில் மட்டுமே உள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக, இறுதி பட்டியலில் சிலர் இடம் பெற்று இருப்பது எப்படி? இதுபோன்ற விதிமீறல்களை குறிப்பிட்டு, கவர்னருக்கு மனு அனுப்பியுள்ளோம். அவர் நேரடியாக தலையிட்டு, வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews