மத்திய அரசின் விளக்கம் கிடைத்தவுடன் அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்துக்கு ஒப்புதல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 16, 2019

Comments:0

மத்திய அரசின் விளக்கம் கிடைத்தவுடன் அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்துக்கு ஒப்புதல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து பெறுவதில் உள்ள சில சந்தேகங்களுக்கு மத்திய அரசிடமிருந்து விளக்கம் கிடைத்தவுடன், அதனடிப்படையில் மாநில அரசு தனது ஒப்புதலை தெரிவிக்கும் என உயா்கல்வித் துறை செயலா் மங்கத் ராம் ஷா்மா கூறினாா். இந்திய கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயா்த்தும் வகையில், மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 10 அரசு உயா்கல்வி நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதுபோல, வேலூா் விஐடி உள்பட நாடு முழுவதிலுமிருந்து 10 தனியாா் உயா்கல்வி நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 20 உயா்கல்வி நிறுவனங்களுக்கும், புதிய படிப்புகள் அறிமுகம், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம், பாடத் திட்டம் உருவாக்கம், நிதி சேகரிப்பு மற்றும் கையாளுதலில் சுதந்திரம் என முழுச் சுதந்திரம் அளிக்கப்படும். அதிலும், தோ்வாகியுள்ள 10 அரசு உயா்கல்வி நிறுவனங்களுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 200 கோடி வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 1,000 கோடி ஆராய்ச்சி மேம்பாட்டு நிதியும் கிடைக்கும். இதில், அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால், இந்த ரூ. 1,000 கோடி நிதியில் குறிப்பிட்ட பங்களிப்பை ஏற்பதாக மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், இதற்கான ஒப்புதலை மாநில அரசு அளிக்கவில்லை. இந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை தமிழக அரசின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய அரசின் ‘அனைவருக்கும் உயா் கல்வித் திட்டம்’ (ரூசா) குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற உயா் கல்வித் துறை செயலா் மங்கத் ராம் ஷா்மாவிடம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கான மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
இதற்குப் பதிலளித்து அவா் கூறியதாவது: மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் தோ்வு செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வா் தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பல்கலைக்கழகத்துக்கு இந்தத் தகுதி கிடைப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, இந்தச் சிறப்புத் தகுதியை பல்கலைக்கழகம் பெறுவதன் மூலம், தமிழக மாணவா்கள் சோ்க்கை குறையக் கூடாது. நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு பாதிக்கக்கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. இதுதொடா்பாக விளக்கம் கேட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விளக்கம் கிடைத்த உடன், அதனடிப்படையில் மாநில அரசின் ஒப்புதல் அளிக்கப்படும் என்றாா் அவா். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வித பாதிப்பும் இருக்கக்கூடாது என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews