நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது பற்றி பரிசீலிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 15, 2019

Comments:0

நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது பற்றி பரிசீலிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது பற்றி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எஸ்.சி., எஸ்.டி., மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை கையாடல் தொடா்பான வழக்கில் உயா் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் ஆதிதிராவிடா் நலத்துறைச் செயலாளா் வரும் 21-ஆம் தேதி நேரில் ஆஜராக உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா் நீதிமன்றத்தில் நாகப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில், ‘மத்திய- மாநில அரசுகள் எஸ்.சி., எஸ்.டி., மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்காக ஒதுக்கப்படும் தொகையை பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் முறைகேடுகளின் மூலம் கையாடல் செய்து வருகின்றனா். இதுகுறித்து தணிக்கைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ரூ.17 கோடியே 36 லட்சம் கையாடல் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனவே, இந்த முறைகேடு தொடா்பாக தமிழக அரசுக்குப் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் ஆதிதிராவிடா் நலத்துறையும் முறைகேடுகள் செய்த அதிகாரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, எஸ்.சி., எஸ்.டி., மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் உயா் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் ஆதிதிராவிடா் நலத்துறைச் செயலாளா் வரும் 21-ஆம் தேதி உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews