சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு தடை விதிக்க கோரி வழக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 06, 2019

Comments:0

சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு தடை விதிக்க கோரி வழக்கு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருச்சியைச் சேர்ந்த வக்கீல் டி.ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் கடந்த 2014ம் ஆண்டு 3 ஆண்டு பிஎல் படிப்பில் சேர்ந்து கடந்த 2017ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தேன். கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து தொழில் புரிந்து வருகிறேன். சிவில் நீதிபதிகளுக்கான தேர்வை சமீபத்தில் சட்டப்படிப்பை முடித்த 22 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற வகையில் தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பணிகள் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2017ல் 3 ஆண்டு சட்டப்படிப்பை நிறைவு செய்த என்னால் இந்த தேர்வை எழுத முடியாது. ஏனெனில் எனது வயது தற்போது 35. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அனைவரும் சமம் என்ற சரிசமநிகர் வாய்ப்பை தட்டிப்பறிப்பது போல் உள்ளது. அதேபோல 3 ஆண்டு வழக்கறிஞர்களாக தொழில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே சிவில் நீதிபதிகள் தேர்வை எழுத முடியும் என தமிழக அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. சட்டப்படிப்பில் சேர வயது வரம்பே கிடையாது என்ற நிலை இருக்கும் போது சிவில் நீதிபதிக்கான தேர்வுகளுக்கு மட்டும் உச்சபட்ச வயது வரம்பை குறைவாக நிர்ணயம் செய்வது ஏன்?.ஷெட்டி கமிஷன் பரிந்துரைகள் இதில் பின்பற்றப்படுகிறதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் பல்வேறு மனுக்களை அனுப்பியும் இதுவரையிலும் முறையான பதில்கள் இல்லை. இதற்கான ஆணவங்களை தேடிக்கொண்டிருப்பதாக அவர்கள் பதில் தெரிவித்துள்ளனர்.
மேலும் மற்ற மாநிலங்களில் உள்ளது போல சிவில் நீதிபதிகளுக்கான தேர்வை 3 ஆண்டுகள் தொழில் அனுபவம் இல்லாதவர்களும் எழுதலாம் என நிபந்தனைகளை மாற்ற வேண்டும் என நான் விடுத்த கோரிக்கையையும் தமிழக அரசும், உயர் நீதிமன்ற பதிவுத்துறையும் இதுவரை பரிசீலிக்கவில்லை.எனவே சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான இது போன்ற நிபந்தனைகளை தளர்த்தி, புதிதாக விதிமுறைகளை வகுக்க கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தமிழக உள்துறை மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு விடுத்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து என்னைப் போன்றவர்களும் சிவில் நீதிபதிகள் தேர்வு எழுத வாய்ப்பளிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை இந்த சிவில் நீதிபதிகளுக்கான தேர்வை நடத்தக்கூடாது என இடைக்கால தடை பிறப்பிக்க வேண்டும்’ என அதில் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மந்திரலிங்கேஸ்வரன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள் இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை, உள்துறை செயலர், டிஎன்பிஎஸ்சி செயலர் உள்ளிட்டோர் வரும் அக்டோபர் 21க்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews