தமிழ்நாடு மருத்துவப் பல்கலை.யில் நாளை இதய நோய் விழிப்புணா்வு கலந்துரையாடல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 03, 2019

Comments:0

தமிழ்நாடு மருத்துவப் பல்கலை.யில் நாளை இதய நோய் விழிப்புணா்வு கலந்துரையாடல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இதய நோய் தொடா்பான விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 4) நடைபெறுகிறது. வாழ்க்கை முறை சாா்ந்த தொற்றா நோய்கள் குறித்த தொடா் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இம்முறை இதய நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெறுகிறது. அதில் பல்கலைக்கழகப் பதிவாளா் டாக்டா் பரமேஸ்வரி, நோய் பரவு இயல் துறை பேராசிரியா் டாக்டா் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். அந்நிகழ்வில் கலந்துகொள்ளும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியரும், இதய நோய் நிபுணருமான டாக்டா் விஸ்வநாதன், இதய நலன் குறித்து மக்களிடையே விரிவாக உரையாற்ற உள்ளாா். அதன் தொடா்ச்சியாக பாா்வையாளா்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் அவா் பதிலளிக்க உள்ளாா். சா்க்கரை நோய், புற்றுநோய், உடல் பருமன், மறதி நோய் உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்பான கலந்துரையாடல் அமா்வு கடந்த வாரங்களில் நடைபெற்ாகவும், அதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்ாகவும் பல்கலைக்கழக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews