530 கெளரவ பேராசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 23, 2019

Comments:0

530 கெளரவ பேராசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 300 பேர் நீக்கப்பட உள்ளனர். அரசு கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை ஈடு செய்யும் பொருட்டு 11 மாத ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 2,120 பேருக்கு மட்டுமே சம்பளத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதனால் கூடுதலானவர்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. எம்.பில்., முடித்தவர்களை தக்க வைத்துக்கொண்டு பிஎச்.டி., முடித்தவர்களை வெளியேற்றுவதாக புகார் எழுந்துள்ளது. கவுரவ விரிவுரையாளர் ஒருவர் கூறுகையில், 'விரிவுரையாளர் பணிக்கு நியமிக்கப்படுவோர் எம்.பில்., படிப்புடன் பிஎச்.டி., அல்லது 'ஸ்லெட்' அல்லது 'நெட்' தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என யு.ஜி.சி., விதி வகுத்துள்ளது. ஆனால் இந்த நியமனத்தில் பிஎச்.டி., முடித்தவர்களை விட எம்.பில்., முடித்தவர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. தற்போது வெளியேற்றுவதிலும் பிஎச்.டி முடித்தவர்களே பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews