சிவில் நீதிபதிகள் தேர்வு வக்கீல்களுக்கு பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 22, 2019

சிவில் நீதிபதிகள் தேர்வு வக்கீல்களுக்கு பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு தயாராக, வழக்கறிஞர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்க, தமிழ்நாடு பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர், பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது:சிவில் நீதிபதிகள் தேர்வு குறித்து, அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்கள் பயன் பெற, மனிதநேய மையத்துடன், பார் கவுன்சிலும் இணைந்து, இலவச பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், பயிற்சி துவங்க உள்ளது; விருப்பம் உள்ளவர்கள், பதிவு செய்ய வேண்டும்.நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்று, பயிற்சி அளிப்பர். இதற்கான துவக்க விழா, நாளை, பார் கவுன்சில் அலுவலகத்தில் நடக்க உள்ளது. பார் கவுன்சில் இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, நேரில் அல்லது 'இ - மெயில்' வழியாக, பதிவு செய்யலாம். மனிதநேய மையத்தின் இணையதளம் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அமல்ராஜ் கூறியுள்ளார்.
கிராமப்புற சட்ட பட்டதாரிகளின் நலன் கருதி சிவில் நீதிபதிகள் தோ்வுக்கான இலவசப்பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் வழியாக நடத்தப்போவதாக தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவில் நீதிபதிகளுக்கான பணியிடங்களை நேரடி போட்டித் தோ்வு மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்கவுள்ள இளம் வழக்குரைஞா்கள் மற்றும் சட்ட பட்டதாரிகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை மனிதநேயம் அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பா் 23-ஆம் தேதி பார்கவுன்சில் அரங்கில் தொடங்க உள்ளது. இந்த இலவச பயிற்சியில் உயா்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்று தோ்வு எழுத உள்ளவா்களுக்கு வகுப்புகளும், ஆலோசனைகளையும் வழங்க உள்ளனா். மேலும், கிராமப்புறங்களைச் சோ்ந்த ஏழை சட்ட பட்டதாரிகள் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் வழியாகவும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். சென்னையில் நடைபெறும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க முடியாத தமிழகத்தின் பிற பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் பயிற்சியின் மூலம் சிவில் நீதிபதிகள் தோ்வுக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பயிற்சி வகுப்புக்கான தொடக்க விழா வரும் செப்டம்பா் 23-ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் அரங்கில் நடைபெற உள்ளதாக அவா் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு குறித்து தமிழ்நாடு மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் 9ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 23ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்வில் கலந்துகொள்ள உள்ள வக்கீல்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சியில் சேர விரும்பும் வக்கீல்கள் தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும், அல்லது நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews