TRB - கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 29, 2019

TRB - கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்த உள்ள உதவிப் பேராசிரியர் தேர்வில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு புதன்கிழமை எழுதியுள்ள கடித விவரம்: தமிழகத்தில் இயங்கி வரும் 99 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில், 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிகழாண்டில் புதிதாக 81 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 இடங்களில் 2,334 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை மட்டும் நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஆர்பி இப்போது வெளியிட்டுள்ளது. உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு, முழுமையான அளவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இந்தப் பணி நியமனத்தின்போது அரசுக் கல்லூரிகளில் ஏற்கெனவே தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் தகுதிவாய்ந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்கள், இணை இயக்குநர் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews