சுலப வழியில் கணிதம் கற்கும் புதிய செல்போன் செயலி: பள்ளிக்கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 12, 2019

சுலப வழியில் கணிதம் கற்கும் புதிய செல்போன் செயலி: பள்ளிக்கல்வித்துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவர்கள் சுலப வழியில் கணிதம் கற்கும் புதிய செல்போன் செயலியை, இந்தியாவில் முதன்முறையாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள செங்கோட்டையன் நகரில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தொட்டிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். தொடர்ந்து அயலூர் கிராமத்தில் புதிதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி மைய பூமி பூஜையில் கலந்து கொண்ட அவர், கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மேட்டிஃபிக் ஆஸ்திரேலியா இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று, கணிதப்பாடத்தை எளிதில் கற்பதற்கான மேட்டிஃபிக் எனப்படும் புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கணிதத்தை விளையாடிக்கொண்டே எளிதில் கற்கும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுமார் 2000 அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகத்தில், இயந்திரத்தை அசம்பிள் செய்து சிறப்பாக செயல்படும் மாணவர்களை தேர்வு செய்து பயிற்சிக்காக சீனாவிற்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews