‘நீட்’ பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் ஆரம்பம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 16, 2019

‘நீட்’ பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் ஆரம்பம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நீட் பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 73-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந் துள்ள சாரணர் இயக்க தலைமை அலுவலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களின் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து சாரணர் இயக் கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்த ஆண்டு முதல் சாரணர் இயக்க மாணவர்களுக்கு சீருடை கள் இலவசமாக வழங்கப்படும். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து உயர்ந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் முழுமை யாக பயன்படுத்திக் கொள்ளப் படுவார்கள். பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக்கயிறு கட்டு வது குறித்த சுற்றறிக்கை விவகாரத் தில் அரசின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எது நடைமுறையில் இருக்கிறதோ அதை பின்பற்ற வேண்டும் என்பது தான் நம் அரசின் கொள்கை. தமிழகம் முழுவதும் இலவச நீட் பயிற்சிக்கு 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த வாரம் முதல் பயிற்சிகள் அளிக்கப்படும். ஏற்கெனவே, ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி தேர்வு விரைவில் நடத்தப் படும். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என பள்ளிக்கலவித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரண சாரணிய இயக்க தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவ மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.பின்னர் 20 ஆண்டுகளுக்கு மேல் சாரண சரணிய இயக்கத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அமைச்சர் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அடுத்த ஆண்டு முதல் சாரண சாரணிய இயக்க மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்படும் என்றார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.மேலும் இலவச நீட் பயிற்சி மையத்தில் சேர 20,000 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளருக்கான தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும் சாதியை குறிக்கும் வண்ணக்கயிறு கட்டிவர தடை என சுற்றறிக்கை வெளியானது கவனத்திற்கு வரவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியான சுற்றறிக்கை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். சுற்றறிக்கையை திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்ற நிலையில், அரசின் கவனத்திற்கு வராமல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து ஜாதி அடையாளத்தை குறிக்கும் கயிறு கட்ட தடை விதித்த விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என்று கூறினார். முன்னதாக பள்ளி மாணவர்கள் சாதியை குறிக்கும் வண்ணக் கயிறு கட்டக் கூடாது என்று ஆகஸ்ட் 12ல் பள்ளிக்கலவித் துறை சுற்றறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews