இன்று முதல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்களுக்கு புது உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 01, 2019

இன்று முதல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்களுக்கு புது உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இனி அருகே உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி வளாகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கல்வி சார் மேம்படுத்தும் வகையில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இனி அருகே உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி வளாகங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: குறுவள மைய பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் கல்வித்தரம் மேம்பாட்டுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நடைமுறை செப். 1ம் தேதி முதல் (இன்று) முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதுமுள்ள மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அப்பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அருகில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் கட்டுப்பாடுகள் முழுதும் அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியின் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews