👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு வேளாண் பல்கலை, ஆறு ஆண்டுகளுக்கு பின் முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளுக்கான அங்கீகாரத்தை மீட்டுள்ளது.
வேளாண் படிப்புகளை நடத்த, 'இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச்' எனும், ஐ.சி.ஏ.ஆர்., அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை, விதிமுறைகளை மீறி, முப்பருவ முறையை அறிமுகப்படுத்தியதால், 2014ம் ஆண்டு, அங்கீகாரம் பறிக்கப்பட்டது. இதனால், பல்கலைக்கு வரவேண்டிய, பல கோடி ரூபாய் நிதியுதவியும் நிறுத்தப்பட்டது.
கடந்தாண்டு, இளநிலை படிப்புகளில், முப்பருவ முறை ரத்து செய்யப்பட்டு, இழந்த அங்கீகாரம் மீட்கப்பட்டது. தொடர்ந்து, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளிலும், முப்பருவ முறை ரத்து செய்யப்பட்டு, பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன. ஐ.சி.ஏ.ஆர்., குழு, ஏப்ரலில், பல்கலையில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டது.
இதன்படி, தற்போது முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு அங்கீகாரத்தை, ஐ.சி.ஏ.ஆர்., வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால், பிற மாநில மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் இப்பல்கலையில் படிக்கவும், கோடிக்கணக்கான நிதியுதவி பெறுவதற்கும், வெளிநாட்டு பல்கலைகளுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகள் மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
துணைவேந்தர் குமார் கூறுகையில், ''வேளாண் பல்கலை, தற்போது, 4க்கு, 3.37 என்ற புள்ளிகளுடன், 'ஏ' கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளது. அனைத்து படிப்புகளுக்கும், இழந்த அங்கீகாரம் மீட்கப்பட்டுள்ளது. தற்போது, 33 முதுநிலை, 29 பி.எச்டி., படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளோம்,'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U