👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் முறைகேடாக பட்டங்கள் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விருதுநகரை சேர்ந்த வாணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு பல்கலை கழகங்கள் மானியக்குழு விதிகளுக்கு எதிராக பட்டங்கள் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.
பல்கலை கழக மானியக்குழு விதிகளுக்கு எதிரான படிப்புகள் அரசு வேலைவாய்ப்புகளுக்கு தகுதியற்றவை என்று தெரிவித்த நீதிபதி, பல்கலை கழகங்கள் வணிக நோக்கில் பட்டங்கள் வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். முறைகேடுகள் நடந்தால் பல்கலை கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மானியக்குழு நடவடிக்கை எடுப்பதில்லை என்று நீதிபதி குற்றம் சாட்டினார்.
மேலும் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் முறைகேடாக பணம் வாங்கி கொண்டு பட்டங்கள் வழங்கப்படுவதாக நீதிபதி கடுமையாக குற்றம் சாட்டினார். பல்கலை கழகங்களில் ஆய்வு நடத்த மானியக்குழு தவறிவிட்டதாகவும், தொலைநிலை கல்வியில் பயின்றவர்களுக்கு வகுப்பறை அனுபவம் இருக்காது என்பதால் வாணியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டார். தொலைநிலை கல்வியில் பயின்றவர்களால் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U