குரூப்-1 தேர்வை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 09, 2019

குரூப்-1 தேர்வை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மார்ச் மாதம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வுக்குப் பின்னர், தேர்வாணையம் மாதிரி விடைத்தாளை வெளியிட்டது. இந்த விடைத்தாளில் பல கேள்விகளுக்கு விடைகள் தவறானவை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கி, பின்னர் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி விக்னேஷ் என்பவர் உள்ளிட்ட பலர் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தை அணுகினர். இந்தக் கோரிக்கையை நிராகரித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், கடந்த ஏப்ரல் மாதம் முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதனையடுத்து விக்னேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் குரூப்-1 தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், நடந்து முடிந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் மாதிரி விடைத்தாளில் 24 கேள்விகளுக்கான பதில்கள் தவறானவை. இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த தேர்வர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அப்படி மதிப்பெண் வழங்கியும் கூட இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள மனுதாரர் குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். குரூப்-1 தேர்வை ரத்துசெய்யக் கோரி விக்னேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
இதை ஏற்காமல் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதனை எதிர்த்து விக்னேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கேள்வித்தாள் குளறுபடி மற்றும் வெளிப்படையின்மை ஆகிய காரணங்களால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது 24 கேள்விகள் தான் தவறானவை என்றும், மாதிரி விடைத்தாளில் குறைபாடு ஏதுமில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்தது. அத்துடன், நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில்,
மனுதாரர் உள்ளிட்ட மனு அளித்த அனைவருக்கும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் டிஎன்பிஎஸ்சி கூறியது. தவறான விடைகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கினாலும் மனுதாரர் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மனுதாரருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியும் மனுதாரர் தேர்ச்சி பெறவில்லை என்ற டிஎன்பிஎஸ்சியின் வாதத்தை ஏற்ற உயர் நீதிமன்றம், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews