NEET NRI quota: எம்.பி.பி.எஸ். சீட்டை எக்கச்செக்க விலைக்கு விற்கும் மாநில அரசுகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

NEET NRI quota: எம்.பி.பி.எஸ். சீட்டை எக்கச்செக்க விலைக்கு விற்கும் மாநில அரசுகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒவ்வொரு ஆண்டும் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டுக்கு 3 முதல் 15 சதவீதம் இடங்கள் போகின்றன. வெளிநாடு வாழ் இந்தியரான மாணவ மாணவிகளுக்கு மட்டும் இந்த ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. பல மாநில அரசுகள் மருத்துவக் கல்லூரிகளில் என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இடங்களை விற்பனை செய்துவருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சாதாராண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவரோ மாணவியோ நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றால் நீட் மருத்துவராகும் கனவு முற்றிலும் தகர்ந்துவிடும். எம்.பி.பி.எஸ் முதலான இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவம் பயிலும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
ஆனால், வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டின் கீழ் ஆயிரக்கணக்கான இடங்களை பல கல்லூரிகள் விற்பனை செய்துவருகின்றன. அரசுக் கல்லூரிகள் சுயநிதிக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டு, அவற்றில் மாணவர் சேரக்கை நடைபெறும்போது, கணிசமான இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு என்ற பெயரில் ஒதுக்கப்படுகின்றன. சில கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு என்ற பெயரில் என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு அளிக்கபடுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 சதவீதம் இடங்கள் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டுக்குப் போகின்றன. வெளிநாடு வாழ் இந்தியரான மாணவ மாணவிகளுக்கு மட்டும் இந்த ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. ஒரு மாணவரின் முழு கட்டணச் செலவையும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் ஏற்க தயாராக இருந்தாலும் இடம் கிடைத்துவிடும். அதாவது வெளிநாடு வாழ் உறவினரோ நண்பரோ அந்த மாணவருக்கான கட்டணம் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சீட் வாங்கித்தரலாம். 2016ஆம் ஆண்டு அரசு கல்லூரி என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் 1900 பேருக்கு மேல் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்தப் பலனைப் பெற்றவர்கள் பெரும்பாலும் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி, பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வெறும் 3 சதவீதம் மட்டுமே. அந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி, பிரிவு மாணவர்களின் சராசரி நீட் கட்-ஆப் 472.5 மதிப்பெண்கள். ஆனால், தனியார் கல்லூரி என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் சராசரி கட்-ஆப் 220.8 மதிப்பெண்கள். அரசு கல்லூரி என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் சராசரி கட்-ஆப் 339.6 மதிப்பெண்கள்.
என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு சேரும் மாணவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால், பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு போன்ற தேவைகளுக்கான நிதி பட்ஜெட்டிலேயே ஒதுக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் இந்த என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சேரும் மாணவ மாணவிகளிடம் ஆண்டுக்கு தலா 14 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசுக் கல்லூரிகளில் எளிதாக சேரும் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.25,000 முதல் ரூ.1 லட்ணம் வரை கட்டணம் செலுத்துகிறார்கள். அப்படி இடம் கிடைக்காதவர்கள் தனியார் கல்லூரிகளுக்குச் செல்ல நினைத்தால், பெரும்பாலான தனியார் கல்லூரிகள் சாதாரணமாக ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் கட்டணம் கேட்கின்றன. எனவே, தனியார் கல்லூரிகளை விட லாபகரமாக இருக்கும் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டின் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர் மூலம் சீட் வாங்குகின்றனர்.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் என்.ஆர்.ஐ ஒதுக்கீடு இடங்களை வழங்கும் மாநிலம் குஜராத். அங்கு 241 இடங்கள் இந்த ஒதுக்கீட்டின் மூலம் தரப்படுகின்றன. அடுத்த இடங்களில் ராஜஸ்தான் (212), பஞ்சாப் (41), புதுச்சேரி (22), இமாச்சலப் பிரதேசம் (20) மற்றும் அரியானா (15) ஆகியவை உள்ளன. ஏற்கெனவே ஆந்திரப் பிரதேச மாநிலம் அரசுக் கல்லூரிகளில் வழங்கிய என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டை கைவிட்டுள்ளது. 2016 வரை மத்தியப் பிரதேசத்தில் வழங்கப்பட்டு வந்த அரசுக் கல்லூரி என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு பொதுமக்கள் போராட்டத்தின் விளைவாக ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கர்நாடகாவிலும் அரசுக் கல்லூரிகளில் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டைத் தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. உடனே எழுந்த எதிர்ப்பு காரணமாக அதனை கைவிட்டது.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நன்றாகப் படிக்கும் மாணவர்களின் இடங்களைப் பறிக்கிறது என்பதால்தான் கர்நாடாகாவில் அரசுக் கல்லூரிகளில் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டை எதிர்ப்பதாக ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மருத்துவர் கே.எஸ். ரவிந்திரநாத் தெரிவிக்கிறார். விளையாட்டு, ஆராய்ச்சி, ஆயவுக் கூடங்கள் போன்றவற்றுக்கு அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை எனவும் கூறுகிறார். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் மருத்துவக் கல்வி இணை இயக்குநர் என்.எம். ஸ்ரீவஸ்தவா, கல்லூரிகளின் பராமரிப்புக்கு என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு இடங்கள் மூலம் நிதி திரட்டுவதாகக் கூறுவதைக் கேள்விக்குள்ளாக்குகிறார். "என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு கல்லூரியை நடத்த ஆகும் செலவில் சிறிய பங்குதான். அதற்கும் மேலாக அரசுக் கல்லூரிகள் ஏழை மாணவர்களும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களும் பயன் அடைய வேண்டும் என்பதற்காக இயங்க வேண்டும். மாறாக வருவாய் ஈட்டுவதற்காக அல்ல." என்று அவர் விவரிக்கிறார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews