200 கல்லுாரிகளில் ஆவின் பாலகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

200 கல்லுாரிகளில் ஆவின் பாலகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''ஆவின் பாலகம் அமைக்க, யார் விண்ணப்பித்தாலும், பாகுபாடின்றி அனுமதி வழங்கப்படும்,'' என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - நல்லதம்பி: வேலுார் மாவட்டம், திருப்பத்துார், அரசு மருத்துவமனையில், ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?அமைச்சர், ராஜேந்திர பாலாஜி: மருத்துவமனை நிர்வாகம், இடம் ஒதுக்கி தந்தால், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்ட பின், நடவடிக்கை எடுக்கப்படும்.நல்லதம்பி: அதேபோல், அரசு கலைக் கல்லுாரி பஸ் நிறுத்தத்தில், ஆவின் பாலகம் அமைக்க வேண்டும்.அமைச்சர், ராஜேந்திர பாலாஜி: கல்லுாரிகளில், ஆவின் பாலகம் திறக்கப்படுகிறது. இதுவரை, 200 கல்லுாரிகளில், பாலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பல கல்லுாரிகளில் அனுமதி கேட்டுள்ளோம்; அனுமதி கிடைத்தால் திறக்கப்படும்.தி.மு.க., - ராமச்சந்திரன்: தஞ்சாவூர் மாவட்டத்தில், 100 ஆவின் பாலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. எப்படி அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி பெறுவதற்கான விதிமுறைகள் ஆகியவற்றை தெரிவியுங்கள்.அமைச்சர், ராஜேந்திர பாலாஜி: அரசு சார்பில், அரசு இடங்களில் திறக்கப்படுகிறது. தனியார் ஆவின் பாலகம் திறக்க முன்வந்தால், வியாபார ஸ்தலத்தில், சொந்த இடம் இருக்க வேண்டும்.வாடகை இடமாக இருந்தால், 10 ஆண்டுக்கான ஒப்பந்தம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், அனுமதி வழங்கப்படுகிறது. ஆவின் பாலகம் கேட்டு, யார் விண்ணப்பித்தாலும், பாகுபாடின்றி அனுமதி வழங்கப்படுகிறது; எம்.எல்.ஏ.,க்களும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews