👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''மரம் நடுதல் மற்றும் பலத்த காற்றால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு, மாணவர் சிறப்பு படை உருவாக்கப்படும்,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் அறிவித்துள்ளார்.சட்டசபையில், அவரது அறிவிப்புகள்: நீர்வள ஆதாரங்களின் நீர் இருப்பு, உள்ளாட்சி அமைப்புகளில், குடிநீர் வினியோக நிலவரம், மழையளவு, வெள்ள பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை கண்டறியவும், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நீராதார தகவல் மற்றும் மேலாண்மை இணையதளம் உருவாக்கப்படும் இடி, மின்னல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 10 லட்சம் ரூபாய் செலவில், குறும்படங்கள் தயாரிக்கப்படும் திருவாரூர், செருகளத்துார் கிராமத்தில், 40 ஆயிரம் மரங்கள் மற்றும் மூலிகை செடிகளுடன் கூடிய மரப்பூங்கா, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். சிட்டா மேம்படுத்தும் சிறப்பு திட்டம், 1 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் மரம் நடுதல் மற்றும் பலத்த காற்றால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு, மாணவர் சிறப்பு படை உருவாக்கப்படும். 114 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தில், திருத்தம் செய்து, நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் கிராம வரைபடங்களை, 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, இ - சேவை மையங்களில், பொது மக்கள் பெறும் வசதி செய்யப்படும் வி.ஏ.ஓ.,க்கள், 9,633 பேருக்கு, 23 கோடி ரூபாய் செலவில், 'லேப்டாப்'கள் வழங்கப்படும் மத்திய அரசிற்கும், பிரிட்டிஷ் துாதரகத்திற்கும் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கீழ், பேரிடர் அபாய குறைப்பு மற்றும் தணிப்பை வலுப்படுத்த, சென்னை, கடலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U